கவிஞர் அழ.அண்ணாமலை

எனது தந்தையார் கவிஞர் அழ.அண்ணாமலை அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே அமைந்துள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டணத்தில் பிறந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெற்று, புதுவயல் இராமனாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள்.  காளியாத்தாவின் அருட்கொடையாலும் இயல்பாகத் தமிழ்மீதுள்ள ஆர்வத்தாலும் கவிதைகள் எழுதி பற்பல கவியரங்க மேடைகளில் அரங்கேற்றியுள்ளார்கள். குறிப்பாகக் கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் அர.சிங்காரவடிவேலன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் தலைமையில் கவிபாடியுள்ளார்கள். ஆசிரியர் பணியை வாழ்வின் ஆதாரமாய்க் கொண்டதால், கவிதை எழுதுவதை உணர்வின் வெளிப்பாடாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்களால் எளிமையும், நளினமும் மிகுந்த படைப்புகளை உருவாக்க முடிந்தது. அவர்களின் பல கவிதைக் குறிப்புகள் அழிந்து போனதால், எஞ்சியவற்றையும், அவர்கள் நினைவில் இன்னும் இருப்பவற்றையும் கேட்டு இங்கே பதிவிடுகிறேன்.


Comments

Popular Posts