அழகப்பன் அண்ணாமலை

எனது தந்தையார் கவிஞர் அழ.அண்ணாமலை அவர்களைப் பார்த்து எனக்கும் சிறிது கவிதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் இளவயதில் காதல் கவிதைகளையே எழுதியதால், அவர்களிடம் காட்டிக் கருத்துக் கேட்கவும், அதை மேலும் மெருகேற்றிக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் காலம் கடந்து  அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு எனது எழுத்துக்களை இப்போது மேம்படுத்தி வருகிறேன். பொதுவாக எனக்கு மரபுக்கவிதை எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம். சில நேரங்களில் மரபென்று நினைத்து இலக்கண மீறல்களுடன் எழுதியதும் உண்டு. தமிழென்னும் ஆழக்கடலில் அலைகள் கரையேறும் கரையோரம் காலைவைத்து விட்டு, கடலுக்கே சொந்தக்காரன் போலக் கற்பனை செய்து எழுதியவற்றை இங்கே படைத்திருக்கிறேன். 

படைப்புகள்

Comments

Popular Posts